என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை"
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழமேல் புதுத் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது52). இவர் அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 4-ந்தேதி இரவு திருப்பதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 3 பீரோக்களையும் உடைத்து பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி போலீசார் கணேசுக்கு போன் செய்து வீட்டில் திருட்டு நடந்திருப்பதாகவும். வீட்டில் இருந்த பொருட்கள் பற்றியும் விசாரித்தனர். அப்போது பீரோவில் 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்தாக கணேஷ் தெரிவித்தார்.
அதன் மூலம் 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் வீட்டின் சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் மோப்பநாய் கொண்டு துப்பு துலக்க முடியாதவாறு இதனை தூவி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் சகானந்தா தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 53). இவர் சிதம்பரம் அருகே பரிவிளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவுக்குமேல் வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இதையறிந்த வாலிபர் அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான். பின்பு அவன் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.
இந்தநிலையில் நேற்று மாலை வெளியூர் சென்றிருந்த சுந்தர்ராஜன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இந்த சம்பவம் குறித்து அவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் மகன் சரண்ராஜ் (வயது 28) என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சரண்ராஜ் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சரண்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 16 பவுன் நகைகளை மீட்டனர்.
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் வள்ளலானந்தபுரம் முல்லை நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினரை வெளியூருக்கு அனுப்பி விட்டு முத்துகிருஷ்ணன் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் முத்துகிருஷ்ணன் பள்ளிக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இதேபோல் சிந்தாமணி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டிய ராஜன் (வயது 30). ஜவுளிக் கடை ஊழியரான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தந்தை சோனை மட்டும் இருந்தார். மதியம் அவர் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் டி.வி. மேலே வைக்கப்பட்டிருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.
2 கொள்ளை சம்பவங்கள் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்